விருத்தாசலம் மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் அளித்தார்.
மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழா இன்று 28ம் தேதி நடைபெற்றது. மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த 13ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், பகல் 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. கடந்த 20ம் தேதி முதல் தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு அங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று 28ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் சிறப்பு அலங்காரத்தில் மங்களநாயகி அம்மன் பக்தர்களுக்கு அருள் அளித்தார். நாளை 29ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 30ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.