காளஹஸ்தி தர்மராஜர் சுவாமி கோவிலில் பிரம்மோத்சவம் நிறைவு
ADDED :107 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான திரௌபதி சமேத தர்மராஜர் சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோத்சவத்தின் ஒரு பகுதியாக, நேற்று( திங்கட்கிழமை) மாலை, கௌரவர்களுக்கு பிண்டப் பிராத்தனையும் கொடியிறக்கும் விழாவும் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து திரௌபதி, அர்ஜுனர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் உற்சவ சிலைகளுக்கு பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு, ஸ்ரீ காளஹஸ்தி நகரின் முக்கிய தெருக்களில் சுவாமி வலம் நடைபெற்றது. பக்தர்கள் வழிநெடுகிலும் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.