உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீப ஒளியில் ஜொலித்த மதுரபாஷினி அம்மன்; ஆடி செவ்வாயில் பக்தர்கள் பரவசம்

தீப ஒளியில் ஜொலித்த மதுரபாஷினி அம்மன்; ஆடி செவ்வாயில் பக்தர்கள் பரவசம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.


சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 153 வது தேவாரத்தலமாக விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில் விளங்குகிறது. சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷினிக்கு சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது. இக்கோவிலில், இன்று ஆடி முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு மதுரபாஷினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. மதுரபாஷினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் அம்மன் பிரகாரம் வலம் வந்து அருள்பாலித்தார். வழிபாட்டில் கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !