செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் உற்சவம் துவங்கியது
ADDED :77 days ago
புதுச்சேரி; வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது.
வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் உள்ள பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் கோவிலில் 97ம் ஆண்டு செடல் உற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. வரும் 27ம் தேதி வரை அம்மனுக்கு தினமும் காலை அபிஷேகமும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 25ம் தேதி பகல் 1:00 மணிக்கு செடல் உற்சவம், மாலை 4:30 மணிக்கு ரத உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.