பூத நாராயண பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு புரட்டாசி சிறப்பு அபிஷேகம்
ADDED :56 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு, பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அருகே உள்ளது மிகப்பழமையான பூத நாராயணர் கோயில் அமைந்துள்ளது. இங்கு பெயருக்கு ஏற்ப கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். கிரிவலம் வருபவர்கள் இவரை தரிசித்தால்தான் கிரிவலம் பூர்த்தி ஆகும் என்பதாக ஓர் ஐதிகம் உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் இன்று புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாளுக்கு பால், சந்தனம் மற்றும் பல்வேறு மூலிகை பொடி கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பூதநாராயணன் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.