உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயதசமி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் அம்பு சேவை

விஜயதசமி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் அம்பு சேவை

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேவை நடந்தது.முருகனின் ஏழாம் படைவீராக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, கடந்த, செப்., 22ம் தேதி, விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அடங்கிய கொலு வைக்கப்பட்டது. நாள்தோறும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது. நவராத்திரி விழாவின், நிறைவான விஜயதசமியான இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து, பகல், 12:00 மணிக்கு, விஜயதசமி விழாவின் முக்கிய நிகழ்வாக, சுப்பிரமணிய சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை சுற்றி, அம்பு சேர்வை நடந்தது. இதில், கோவில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் செந்தில்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !