ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சடையாண்டி கோயில் திருவிழா
பட்டிவீரன்பட்டி; அய்யம்பாளையத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சடையாண்டி கோயில் திருவிழா நடந்தது.அய்யம்பாளையம் சடையாண்டி கோயில் திருவிழாவினை முன்னிட்டு அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோயிலிருந்து சாமி பெட்டி மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக சடையாண்டி கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற நள்ளிரவு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைக்குபின் கறிவிருந்து நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சடையாண்டி கோயில் திருவிழா முடிந்ததும் பெரிய முத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்கு சாமி சாட்டப்பட்டது. 15 வது நாளில் பெரிய முத்தாலம்மன் கோயில் திருவிழா துவங்கும்.