உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரவை முத்துநாயகி அம்மன் கோயில் கொடியேற்றம்

பரவை முத்துநாயகி அம்மன் கோயில் கொடியேற்றம்

வாடிப்பட்டி; பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் கொடிக்கு பூஜைகள் செய்தது கோயில் வளாகத்தை சுற்றி எடுத்து வந்து பக்தர்கள் ஆரவாரத்துடன் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. சிறப்பு அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டினர். சதுரகிரி பூஜாரி வகையறா பூஜாரிகள் பூஜைகள் செய்தனர். முக்கிய நிகழ்வாக அக்.,21ல் அம்மன் கரகம், அக்னிச்சட்டி எடுத்தல், 22ல் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு, பால்குடம்,23ல் கருப்பண்ன சுவாமி கோயில் முன் பொங்கல் வைத்து முளைப்பாரி ஊர்வலம், 24ல் பெருமாள் கோயில் முன் பொங்கல் வழிபாடு, 25 மாலை 3:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, நகர்வலம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள், கிராமத்தார்கள், கிராம கமிட்டியினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !