ஐப்பசி அமாவாசை வழிபாடு; பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் திதி கொடுத்து வழிபாடு
ADDED :10 minutes ago
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் குவிந்தனர். தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
பேரூர் நொய்யல் படித்துறையில், ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் மூதாதையருக்கு திதி கொடுத்து, சிறப்பு வழிபாடு செய்தனர். எள், அரிசி, பழத்துடன் பிண்டம் வைத்து, புரோகிதர் முன்னிலையில் சிறப்பு வழிபாடு செய்தனர். தங்கள் முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து அவர்களை நினைத்து வணங்கினர். பின்னர், ஏழை எளியோருக்கு அன்னதானம், பசுக்களுக்கு அகத்திக்கீரைகளை வழங்கினர். தொடர்ந்து, முன்னோர்களின் நினைத்து தண்ணீரில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்,