உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்த சஷ்டி விழா; திருப்பரங்குன்றம் கோயிலில் இடம் பிடிக்க பக்தர்கள் போட்டோ போட்டி

கந்த சஷ்டி விழா; திருப்பரங்குன்றம் கோயிலில் இடம் பிடிக்க பக்தர்கள் போட்டோ போட்டி

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நாளை (அக். 22) காலை 7:00 மணிக்கு துவங்குகிறது.


அனுக்ஞை பூஜை, யாகசாலை பூஜை முடிந்து ஆறுமுகம் கொண்ட சண்முகர் வள்ளி தெய்வானை, பிறமணிய சுவாமி தெய்வானைக்கு சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்படும். திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 9:00 மணிக்கு மேல் விரதம் மேற்கொள் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். திருவிழா நடைபெறும் நாட்களில் கோயில் மண்டபங்களில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்வர். நேற்று முதல் கோயில் மண்டபங்களில் பக்தர்கள் போர்வை விரித்தும், சாக் பீஸ்களால் தங்களது பெயர், ஊரின் பெயர் எழுதி இடம் பிடித்து வருகின்றனர். வழக்கமாக தீபாவளிக்கு மறுநாள் சஷ்டி துவங்கும். அதனால் தீபாவளியை கொண்டாடி முடித்தவுடன் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்குவர். இந்த ஆண்டு நாளை சஷ்டி தூங்குவதால் தீபாவளி அன்று இரவு பக்தர்கள் கோயிலில் தங்க நிர்வாகம் அனுமதிக்கப்படாததால் இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் கோயிலில் இடம் பிடிக்க துவங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !