உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் கோவில்களில் கேதார கௌரி நோன்பு வழிபாடு

திருக்கோவிலூர் கோவில்களில் கேதார கௌரி நோன்பு வழிபாடு

திருக்கோவிலூர்; திருக்கோவிலூரில் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று கேதார கவுரி நோன்பு எடுத்து வழிபாடு நடத்தினர்.


நரகாசுரனை பகவான் வதம் செய்த நாளாக தீபாவளி கொண்டாடபடுகிறது. அன்றைய தினம் அடுத்து வரும் அமாவாசை தினத்திலும் ஐஸ்வரியம் தரும் கேதார கவுரி விரதம் இருப்பது வழக்கம். அந்த வகையில் திருக்கோவிலூரில் தீபாவளி நோன்பு எடுக்கும் வழக்கம் உள்ள பக்தர்கள் நேற்று காலை முதல் விரதமிருந்து விரட்டானேஸ்வரர், உலகளந்த பெருமாள் கோவில் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்கு அருகாமையில் இருக்கும் கோவில்களுக்கு சென்று கேதார கௌரியை வழிபட்டு நோன்பு எடுத்தனர். அமாவாசை நோன்பு எடுக்கும் பக்தர்கள் நேற்று காலை முதல் விரதம் இருந்து குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று நோன்பு எடுத்தனர். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !