உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐப்பசி முதல் வெள்ளி; கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஐப்பசி முதல் வெள்ளி; கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு அபிஷேகம்,  சிற்பபு பூஜைகள் நடந்தது.   இதில் பச்சை நிற அலங்காரத்தில் சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் மூலவர் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


ஐப்பசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் -குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது .இது மூலவர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !