சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2 hours ago
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
தியாகதுருகம் அடுத்த சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்து ஆராதனை நடந்தது. இரவு உற்சவர் அம்மன் சர்வ அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து பூசாரிகள் தாலாட்டு பாடல் பாடி ஆராதனை நடத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.