உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் மாவிளக்கு எடுத்த பக்தர்கள்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் மாவிளக்கு எடுத்த பக்தர்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத, கடை ஞாயிறு விழாவின் கடைசி வாரமான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெரிசலில் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், வாரந்தோறும் பக்தர்கள் மாவிளக்கு பரிகாரம் செய்யும், கடை ஞாயிறு பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கார்த்திகை மாத கடைசி வார கடை ஞாயிறு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி மூலவருக்கும், உத்சவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் மஹாதீபாராதனை நடந்தது. கார்த்திகை மாதத்தின் கடைசிவாரம் என்பதால், கடந்த வாரங்களைவிட நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதில், சிறுவர்கள், பெரியவர்கள் என, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்சட்டியில், பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து, அதில் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தலையில் மாவிளக்குடன், கூட்ட நெரிசலில் பிரகாரத்தை வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவையொட்டி கோவில் குளக்கரையில், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு மீட்பு உபகரணங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல கூட்ட நெரிசலை தவிர்க்க சிவ காஞ்சி போலீசாரும் கோவிலின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !