உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி : திரளாக பத்தர்கள் பங்கேற்பு

அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி : திரளாக பத்தர்கள் பங்கேற்பு

உத்தமபாளையம்; அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் ஹனுமனை தரிசனம் செய்தனர்.


தேனி மாவட்டத்தில் ஹனுமனுக்கான பிரத்யேக கோயில் அனுமந்தன்பட்டியில் உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் மூலவராக சன்னதியில் எழுந்தருளியுள்ளார். சுயம்புவாக தோன்றியவர் என்றும் கூறப்படுகிறது, இந்த கோயிலில் இன்று காலை ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. மார்கழி மாதம் அமாவாசை திதியில் மூல நட்சத்திரத்தில் ஹனுமன் அவதரித்தார். அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஹனுமன் ஜெயந்தி என்று கொண்டாடுகின்றோம். இன்று  அதிகாலையில் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து கால சாந்தி பூஜை, சகஸ்ரநாம பூஜை, புஸ்பாஞ்சலி நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் பால்குட ஊர்வலம், ஹோமம் போன்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று காலை ஹனுமன் சந்தனகாப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மூலவர் சன்னதி முழுவதும் மலர்க் கோலம் போடப்பட்டிருந்தது. செவ்வாழை, பச்சை வாழைப்பழங்கள் சன்னதிக்கு முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கேட்ட வரம் தரும் ஹனுமனை அவரது பிறந்த தினத்தில் தரிசனம் பண்ண அதிகாலை முதல் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தரிசனம் செய்த பக்தர்களுக்கு துளசி மாலை, வாழைப்பழம், அவல், வடை, கேசரி, சர்க்கரை பொங்கல், லட்டு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் பல பக்தர்கள் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அவல் பிரசாதங்களை வழங்கினர். அன்னதானமும் நடைபெற்றது. ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மூலவர் சன்னதி முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. படவிளக்கம் : அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஹனுமன் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !