உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னுாரில் பழனிக்கு பாத யாத்திரை :முருக பக்தர்கள் பரவசம்

குன்னுாரில் பழனிக்கு பாத யாத்திரை :முருக பக்தர்கள் பரவசம்

குன்னுார்: குன்னுாரில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்ட முருக பக்தர்கள் மலைபாதை வழியாக நடந்து சென்றனர்.


குன்னுாரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆண்டு தோறும், தைப்பூச திருவிழாவையொட்டி, பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று குன்னுாரில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். இவர்களுக்காக, சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. வேல், காவடி ஏந்தியும், தீர்த்த குடங்கள் சுமந்தும் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் குன்னுார்– மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக நடந்து சென்றனர். அதில், பலரும் பஜனைகள் பாடல்கள் பாடி சென்றனர். முன்னதாக வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல, கே.என்.ஆர்., பர்லியார் உட்பட பல்வேறு இடங்களிலும் முருக பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. வரும், 5ம் தேதி இவர்கள் பழனியை சென்றடைந்து, முருகனை தரிசனம் செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !