காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் குதிரை வாகனத்தில் சுவாமி உலா
ADDED :65 days ago
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி இராபத்து வைபவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இராபத்து 8 ம் திரு நாளில் ரங்கநாதர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதி வழியாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அதனை தொடர்ந்து ஆஸ்தானம் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் ஆழ்வார்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.