திருவேடத்தில் ஏடகநாதர்கோயில் தெப்பத்திருவிழா
ADDED :2 hours ago
சோழவந்தான்: திருவேடத்தில் ஏடகநாதர்கோயில் தெப்பத்திருவிழா நடந்தது. காலை 8:30 மணிக்கு சுவாமி, அம்மன்கோயிலில் இருந்து பிரம்ம தீர்த்த தெப்பத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அன்னதானம் நடந்தது. மதியம் 3:30 மணிக்கு உலக நன்மை வேண்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை, விளக்கு பூஜை நடந்தது. இதைதொடர்ந்து சுவாமியும் அம்மனும் மின் அலங்காரத்தில் ரத வீதிகளில் வலம் வந்தனர். நிர்வாக அலுவலர் சரவணன், அறங்காவலர் சேவுகன், விழா கமிட்டியினர், கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.