மானாமதுரையில் பழமை வாய்ந்த நாகநாதர் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம்நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த நாகநாதர் கோயிலில் 8 ம்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
மானாமதுரை பட்டத்தரசி அருகே ராம்நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த நாகநாதர் கோயில் சிதிலமடைந்ததையடுத்து கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது.பணிகள் முடிந்ததை தொடர்ந்து இன்று காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாகுதி முடிவடைந்து 8 ம்தேதி காலை 9:15 மணியிலிருந்து 10:15 மணிக்குள் யாகசாலைக்குள் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை அர்ச்சகர்கள் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க உள்ளனர்.இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக,ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.