உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கல்யாண விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

பொள்ளாச்சி கல்யாண விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ரங்கசமுத்திரம் தொழில்பேட்டையில் உள்ள கல்யாண விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது.


பொள்ளாச்சி, ரங்கசமுத்திரம் தொழில்பேட்டையில் கல்யாண விநாயகர் கோவிலில், திருக்கயிலாய நாதர், வண்டார் குழலி அம்மன், பழநி முருகர், தர்மசாஸ்தா, பிரம்மா, சரஸ்வதி, விஷ்ணு, மகாலட்சுமி, வராகி அம்மன், காலபைரவர், நவக்கிரகங்கள், பரிகார விநாயகர் சன்னதிகள் உள்ளன. கோவில் புதுப்பிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், யாக பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. உடுமலை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், நிர்வாக கமிட்டியினர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !