உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா துவக்கம்; கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா துவக்கம்; கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில், பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.


கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 45 ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று துவங்கியது. சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள, வி.எஸ்., டிரஸ்ட் வளகத்தில் துவங்கிய விழாவில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் முத்துக்குமரன் வரவேற்றார். செயலாளர் சம்மந்தம், டாக்டர் அருள்மொழிச்செல்வன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்ற செயலர் விஜயா தாயன்பன் விழாவை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெறும் திருத்தணி திருமுறை ஓதுவார் சுவாமிநாதனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை 5:30 மணிக்கு மங்கல இசையுடன் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது. இதில் அமெரிக்கா, பெங்களூரு, சென்னை, ைஹதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நாட்டிய பள்ளி மாணவர்கள், திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வரும் 17ம் தேதி வரை 5 நாட்களுக்கு நாட்டியாஞ்சலி நடைபெறும். இதில், 500க்கும் மேற்பட்ட பரத கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடுகின்றனர். இந்த நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிர்வாகிகள் நடராஜன், ராமநாதன், முத்துக்குமரவன், சபாநாயகம், முத்துக்குமார், ராமநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !