நடுவீரப்பட்டு குழந்தை சுவாமி சித்தருக்கு அமாவாசை பூஜை
ADDED :3 hours ago
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் குழந்தை சுவாமி சித்தருக்கு நேற்று மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு காலை கணபதிஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. மதியம் 12:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்து,யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து குழந்தை சுவாமி சித்தர் உற்சவர் மற்றும் மூலவருக்கு கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சித்தரை வழிபட்டனர். அதுபோல் நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள பச்சைகேந்திரசுவாமி சித்தருக்கு சிறப்பு பூஜை நடந்தது.