உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பாதயாத்திரை குழு சார்பில் பந்தக்கால் நடும் விழா

பழநி பாதயாத்திரை குழு சார்பில் பந்தக்கால் நடும் விழா

வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழாவையொட்டி, பந்தக்கால் நடும் விழா நடந்தது.


பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின், 50வது ஆண்டு பொன்விழா மற்றும் மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா, வரும், 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு, வால்பாறை சுப்ர மணிய சுவாமி கோவிலில் நேற்று பந்தக்கால் நடும் விழா நடந்தது. முன்னதாக, முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. காலை, 10:30 மணிக்கு கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வரும் மார்ச் 2ம் தேதி காலை, 9:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மார்ச் 6ம் தேதி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பழநி பாதயாத்திரை காவடிக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !