திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவின் 36 வது ஆண்டு நடை பயண துவக்கம்
ADDED :1 days ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவின் சார்பில் 36 வது ஆண்டு நடைபயண துவக்க விழா நடந்தது.
திருக்கோவிலூர், திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவின் தலைவர் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில், ஆண்டு தோறும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் சன்னதியில் துவங்கி, நடைபயணமாக பக்தர்கள் பலரும் திருப்பதிக்கு யாத்திரை சென்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 36-வது ஆண்டு திருமலை திருப்பதி பாதயாத்திரை உலக அளந்த பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்து துவங்கியது. கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நடைபயணமாக புறப்பட்டனர்.