உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காஞ்சி சதாசிவமூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை

திருக்காஞ்சி சதாசிவமூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை

வில்லியனுார்: திருக்காஞ்சியில் சதாசிவமூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் துவங்கியது.


திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவில், சங்கராபரணி ஆற்றங்கரையோரம் புதிதாக 27 நட்சத்திர மூர்த்தங்கள், 12 ராசி மூர்த்தங்களோடு மனோன்மணி அம்பிகா சமேத சதாசிவமூர்த்தி கோவில் கட்டப்பட்டள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, கடந்த 16ம் தேதி மாலை விக்னேஸ்வரபூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 17ம் தேதி மகா கணபதி ேஹாமம், தன பூஜை, கோபூஜை, அஸ்வபூஜை நடந்தது. நேற்று காலை ஆச்சார்ய வர்ணம், யாகசாலை அலங்காரம், அஷ்டபந்தனம் சாற்றுதல், மாலை 6:30 மணிக்கு மேல் முதற்கால யாக பூஜை துவங்கியது. இன்று (21ம் தேதி) காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, சங்கராபரணி நதியில் விஷேச சந்தி கால பூஜைகள், மாலை 5:00 மணிக்கு மேல் மூன்றாம் கால பூஜை, தீபாராதனை நடக்கிறது. நாளை (22ம் தேதி) அதிகாலை 4:30 மணியளவில் நான்காம் காலயாக பூஜைகள், காலை 6:30 மணியளவில் பரிவாக யாகசாலை, கலசங்கள் புறப்பாடு, யாத்ராதானம் கடம் புறப்பாடு, காலை 8:10 மணியளவில் விமான கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து நட்சத்திர ராசி மற்றும் நவக்கிரஹங்களுக்கு மகா கும்பாபிஷேகம், காலை 9:15 மணியளவில் சதாசிவ மூர்த்திக்கு மகா அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4:00 மணியளவில் அபிேஷக ஆராதனை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !