மைசூரு அரண்மனையில் உகாதி சங்கீத உத்சவம்; நாளை முதல் 21ம் தேதி வரை நடக்கிறது
ADDED :1 hours ago
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை நடக்கிறது.
கன்னட உகாதியை முன்னிட்டு, மைசூரு அரண்மனை வாரியம் சார்பில், 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை மூன்று நாட்கள் உகாதி சங்கீத உத்சவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 19ம் தேதி இரவு 7:30 மணிக்கு மாவட்ட பொறுப்பு வகிக்கும் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா உத்சவத்தை துவக்கி வைக்கிறார். எம்.பி.,க்கள் யதுவீர் உடையார், சுனில் போஸ் உட்பட பலர் பங்கேற்கின்றனர். மூன்று நாட்களும் மாலை, 5:00 முதல் இரவு 10:00 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சங்கீத உத்சவத்துக்காக பணிகள் நடப்பதால், கடந்த 16 முதல் வரும், 22ம் தேதி வரை இரவு 7:00 முதல் 8:00 மணி வரை நடைபெறவிருந்த ஒளி – ஒலி காட்சியை, அரண்மனை வாரியம் ரத்து செய்துள்ளது.