வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி, வேலுடையான்பட்டு வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் அய்யனார், வீரன் முதலிய பரிகார தெய்வங்களின் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை 9:30 மணிக்கு துவங்கி நடந்தது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வழிபாட்டில், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., என்.எல்.சி., இயக்குனர்கள் சுரே ஷ் சந்திர சுமன், வெங்கடாசலம், சமீர் ஸ்வரூப், என்.எல்.சி., விஜிலென்ஸ் அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன், கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் கதிர் அண்ணாதுரை, திருக்குமார், ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி., ஓ.பி.சி., நலச்சங்க நிர்வாகிகள், செம்பையனார் டிரேடர்ஸ், நெய்வேலி வழக்கறிஞர் சங்க தலைவர் கலைமணி,அம்மன் எசன்ஸ், மார்ட் ரவீந்திரன்,தனம் மெஸ் சீனீவாசன்,வடலுார் அரிமா சங்க மாவட்ட தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பாதுகாப்பு பணியில், நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடு பட்டிருந்தனர்.