உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொங்கு வடுகநாத சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

கொங்கு வடுகநாத சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

திருப்பூர்: காசிக்கு நிகரான பைரவ தலமாக போற்றப்படும் குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி மற்றும் சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜ பெருமாள் கோவில், கொங்காலம்மன், சின்னம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.


கடந்த, 17ம் தேதி விக்னேஷ்வரர் பூஜை, கிராமசாந்தி, 18ம் தேதி மஹா கணபதி ேஹாமம், பிரவேச பலி பூஜைகளுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. சுதர்ஷன ேஹாமம், லட்சுமி ேஹாமம்; அஷ்ட பைரவர் ேஹாமம் மற்றும் நான்கு கால வேள்வி பூஜைகள், வேதமந்திரங்களுடன் நடைபெற்றன. 22ம் தேதி, மாமாங்கம் பர்வதவர்த்தினி உடனமர் ராமலிங்க சுவாமி கோவிலில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து, மங்கள இசை, வாண வேடிக்கையுடன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். நேற்று காலை, 6:00 முதல், 7:00 மணிக்குள், கொங்காலம்மன், சின்னம்மன், அய்யப்ப சுவாமி விமானகலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 9:00 முதல், 9:30 மணிக்குள், மூலாலய விமான கலசம், ராஜகோபுரம், பரிவார தெய்வங்களுக்கும்; காலை, 10:00 முதல், 10:30 மணிக்குள், கொங்கு வடுகநாத சுவாமி, ஸ்ரீசவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 22ம் தேதி முதல், நேற்று வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, அறங்காவலர்கள், திருப்பணி குழுவினர், செயல் அலுவலர் உள்ளிட்டோர் செய்திருந் தனர். இன்று துவங்கி, தொடர்ந்து, 48 நாட்களுக்கு, தினமும் காலை, 11:00 மணிக்கு மண்டல பூஜை நடக்கும். மண்டல பூஜை முன்பதிவுக்கு, 83446 02999, 87784 34313 என்ற எண்களில் அணுகலாம் என்று விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !