ராமர் அலங்காரத்தில் பரமக்குடி முத்தாலம்மன் வீதி உலா வந்து அருள்பாலிப்பு
ADDED :3 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் ராமர் அலங்காரத்தில் முத்தாலம்மன் பல்லக்கில் உலா வந்தார். கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் நடக்கிறது. அம்மன் பூதகி, சிம்மம் ஆகிய வாகனங்களில் பெரிய பஜார், ஆர்ச், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தினம்தோறும் வலம் வருகிறார். மேலும் ஒவ்வொரு நாளும் காலை பெருமாளின் பல்வேறு அவதாரங்களில் அருள்பாலிக்கிறார். நாளை காலை காளி அலங்காரமும், மாலை வண்டி மாகாளி உற்சவம் நிறைவடைந்து சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. கோயிலில் தினம்தோறும் பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். ராஜகோபுரம் உட்பட கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.