உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் மாவட்ட கோவில்களில் ராம நவமி கொண்டாட்டம்

விருதுநகர் மாவட்ட கோவில்களில் ராம நவமி கொண்டாட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்:  ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ராமநவமி உற்ஸவம் திருவேங்கடமுடையான் சன்னதியில் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை ஆண்டாள் கோயிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணன் மாட வீதிகள் வழியாக திருவேங்கடமுடையான் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சன பூஜைகள் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் ராமர், சீதை, லட்சுமணன் எழுந்தருளினர். திரளாண பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் வீதியுலா நடந்தது. 


*ராஜபாளையம் பழையபாளையம் ராமசாமி கோயில் ஐந்து நாள் பிரம்மோற்ஸவமாக கொண்டாடப்பட்டது. விழா காலங்களில் சுவாமி கஜ, சேஷ, கருட, ஹனுமந்த வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடந்தது. தினமும் பஜனை, கோலாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஆதி வழிபடும் விநாயகர் கோயிலில் அஷ்ட வரத ஆஞ்சநேயர், கோதண்ட ராமர் கோயில், வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில், தேவதானம் கல்லணை ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட இடங்களில் அபிஷேகங்கள், ஆராதனை, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


*விருதுநகர் மீசலுார் ஷீரடி சாய்பாபா மந்திர் கோயிலில் ராமநவமி விழா, சாய்பாபா ஜெயந்தி விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின் விஷ்ணு சகஸ்ர நாமம் வாசிக்கப்பட்டது. மதியம் தீபாராதனை காட்டப்பட்டது. பின் அன்தானம், பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !