பகவதி அம்மன் கோயில் திருவிழா: மஞ்சள் நீராட்டுடன் நிறைவு
ADDED :51 minutes ago
கொடைரோடு: பள்ளபட்டி தெற்கு தெரு பகவதி அம்மன் கோயில் திருவிழா சாமி சாட்டப்பட்டது. மார்ச் 31ல் கொடி மரம் நடப்பட்டு திருவிழா துவங்கியது. ஏப். 1ல் சுவாமி கரகம் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கை, மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. கிராமத்தினர் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர் முளைப்பாரி, மாவிளக்கு, தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மஞ்சள் நீராட்டுடன் கரகம் விடுதலுடன் விழாவில் நிறைவடைந்தது.