பரமக்குடி சித்திரை திருவிழா: கைலாச, அன்ன வாகனத்தில் சுவாமி உலா
ADDED :35 minutes ago
பரமக்குடி: பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் சித்திரை திருவிழா நடக்கிறது. இங்கு நேற்று கைலாச வாகனத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அன்ன வாகனத்தில் விசாலாட்சி அம்பிகை அருள்பாலித்தனர். ஏப்., 27 தபசு திருக்கோலத்தில் கமல வாகனத்தில் விசாலாட்சி அம்மன் எழுந்தருளுவார். அன்று மாலை மாற்றம் நிகழ்ச்சியும், மறுநாள் காலை திருக்கல்யாண விழா நடக்கிறது.