உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ பந்தல்கால் நடப்பட்டது

திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ பந்தல்கால் நடப்பட்டது

 காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று பிரமோற்சவம் விழாவை முன்னிட்டு பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது.


காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் சனீஸ்வர பகாவன் தனிசன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பலித்து வருகிறார்.இக்கோவிலில் பிரமோற்சவம் விழாவை முன்னிட்டு நேற்று பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடந்தது.அதனை தொடர்ந்து வரும் மே.,13ம் தேதி மஹா துவஜாரோஹணம் உடன் பஞ்சமூர்த்திகள் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 21ம் தேதி செண்பகத்தியாகராஜர் வசந்தமண்டபத்திலிருந்து எழுந்தருளல் நிகழ்ச்சி,வரும் 25ம் தேதி தங்கரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா,வரும் 27ம் தேதி காலை 5.30மணிக்கு திருத்தேர் திருவிழா மற்றும் வரும் 29ம் தேதி தெப்போற்சவம் நடைபெறுகிறது. நேற்று பிரமோற்சவம் விழாவை முன்னிட்டு பந்தல்கால் முகூர்த்தம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பந்தல்கால்களுக்கு பலவகையான திரவியங்களால் சிற ப்பு பூஜைகளுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !