உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்ணாடம் கோவிலில் சித்திரை திருவிழா; 30 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று தேர்கள் வலம்

பெண்ணாடம் கோவிலில் சித்திரை திருவிழா; 30 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று தேர்கள் வலம்

பெண்ணாடம்: பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில், 3 தேர்களை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 


பெண்ணாடத்தில், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழாவில் விநாயகர், அம்மன், மூலவர் ஆகிய தேர்களை பக்தர்கள் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 3 தேர்களும் மர்மமான முறையில் எரிந்து சாம்பலானது. இதனால் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது.. பக்தர்களின் கோரிக்கையேற்று கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன் புதிதாக மூலவர் தேர் மட்டும் அமைக்கப்பட்டு, சித்திரை திருவிழா துவங்கியது. தொடர்ந்து, விநாயகர் மற்றும் அம்மன் தேர் புதிதாக அமைத்து கடந்த, 2 மாதங்களுக்கு முன் விநாயகர் தேரும், கடந்த வாரம் அம்மன் தேர் வெள்ளோட்டமும் நடந்தது. நடப்பாண்டிற்கான சித்திரை தேர் திருவிழா கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு 8:00 மணியளவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, சூரிய பிறை - சந்திர பிறை, அப்பருக்கு சூலப, இடப முத்திரையிடுதல், சமணரை கழுவிலேற்றல், பிச்சாண்டவர் உற்சவம் நடந்தது.  முக்கிய நிகழ்வான இன்று காலை 7:15 மணியளவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர், அம்மன், மூலவர் ஆகிய 3 தேர்களையும் பக்தர்கள் 4 ரத வீதிகள் வழியாக சிவ சிவ கோஷத்துடன் இழுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை தீர்த்தவாரி, நாளை கொடியிறக்கம், வரும் மே, 2ம் தேதி வசந்த உற்சவத்துடன் சித்திரை தேர் திருவிழா நிறைவடைகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !