உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிமூர்த்தி பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு

ஆதிமூர்த்தி பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஆதிமூர்த்தி பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே பழைய புதூரில் ஆதிமூர்த்தி பெருமாள் கோயில் உள்ளது. இங்கு சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. முதல் நாள் கொடியேற்றமும், அதை தொடர்ந்து அன்னபட்சி வாகன திருவீதி உலா நடந்தது. இரண்டாம் நாள் திருக்கல்யாண உற்சவமும், மூன்றாம் நாள் கருட வாகன உற்சவமும் நடந்தது. நான்காம் நாள் தீர்த்தவாரி கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆதிமூர்த்தி பெருமாள் கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !