சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :28 minutes ago
பெரம்பலுார்: சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில், சித்திரை தேரோட்டம் இன்று நடந்தது. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில், சித்திரை தேரோட்டத்தையொட்டி நாள்தோறும் இரவு யானை, குதிரை உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகளும் நடந்தது. திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, இன்று காலை நடந்தது. சிறுவாச்சூர் கிராமத்தின் பிரதான வீதிகள் வழியே இழுத்துச் செல்லப்பட்ட தேர் மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. பெரம்பலூர், அரியலூர், துறையூர், திருச்சி, கடலூர், நாமக்கல், சென்னை, கடலூர் உட்பட பல்வேறு நகரங்களிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.