உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் தற்காலிக தடை

வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் தற்காலிக தடை

தொண்டாமுத்தூர்: பூண்டி, வெள்ளியங்கிரி மலை பகுதியில், கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், பக்தர்களின் நலன் கருதி, வெள்ளியங்கிரி மலையேற, பக்தர்களுக்கு வனத்துறையினர், நாளை முதல் தற்காலிக தடை விதித்துள்ளனர்.


கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலை தொடரின் ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, கடந்த, பிப்., 1ம் தேதி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர். இதனையடுத்து, பக்தர்கள் மலையேறி, ஈசனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பையொட்டி, நாளை முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,"பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏற கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் நாட்களில் தென்மேற்கு பருவமழை அதிக அளவு பெய்யும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மே 13ம் தேதி முதல், பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை உத்தரவு தொடரும்,"என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !