செஞ்சி அருணாசல ஈஸ்வரர் கோவிலில் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை
ADDED :3 hours ago
செஞ்சி: செஞ்சி அருணாசல ஈஸ்வரர் கோவில் வெங்கடேச பெருமாளுக்கு விஷ்ணுபதி புண்ணியகால பூஜையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்தனர்.
செஞ்சி பீரங்கிமேடு அருணாசல ஈஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு நேற்று விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அ அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. இதில் 100 கணக்கான பக்தர்கள் வெங்கடாஜலபதி சன்னதியை 27 முறை சுற்றி வந்து வழிபட்டனர்.