உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டக்குடி முத்தையா கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை

திட்டக்குடி முத்தையா கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை

திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த பெருமுளை முத்தையா சுவாமி கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. இக்கோவிலில் வரும் ஜூலை 5ம்தேதி 10:00 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணியாக இன்று கொடி மரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜையும் நடந்தது. தொடர்ந்து, காலை 10:15 மணியளவில் கோவில் முன் புதிய கொடிமரம் பிரதஷ்டை செய்யப்பட்டது. பின், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவக்குமார், செயல் அலுவலர் பாக்கியராஜ், பரம்பரை அறங்காவலர்கள் கலைச்செல்வம், செல்வம், வாழப்பாடி கலைமணி ராமமூர்த்தி, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி, புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன், சோழன் குமார் வாண்டையார், உபயதாரர்கள், குலதெய்வ பக்தர்கள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !