பாரத கலையை வளர்க்வே சிற்பம், சட்டக்கல்லுாரி துவக்கம்; விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
காஞ்சிபுரம்: தென்மையான பாரத கலையை வளர்க்வே சிற்பக்கல்லுாரி மற்றும் சட்டக்கல்லுாரி துவக்கப்பட்டுள்ளது என, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர் நிலை பல்கலை கழகம் இயங்கி வருகிறது. இங்கு, மகளிர் சட்டப்பள்ளி துவக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு, சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர் நிலை பல்கலை கழக துணை வேந்தர் ஸ்ரீநிவாசு தலைமை வகித்தார். பிஎஸ்இ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தரராமன் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். சென்னை உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீராம், கர்நாடகா உயர் நீதி மன்ற நீதிபதி இந்திரேஷ், சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி அனிதா சுமந்த், ஆந்திரா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கடஜோதிர்மை பிரதாபா ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
சங்கர மடத்தின் பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மகளிர் சட்டப்பள்ளியை துவக்கிவைத்து, அளுளாசி வழங்கி பேசியதாவது: நகரேஷூ காஞ்சி என, அழைக்கப்படும் காஞ்சிபுரம் தென்மையான நகராமாகும். இந்நகரத்தில், நம்முடைய கலச்சாரம், மேலாண்மை, நிர்வாகம் எதை சுற்றி இருக்கிறதென்றால், கல்வியை சுற்றி தான் உள்ளது. நம்ம கல்வி, ஆதி காலத்தில் ஜோதிடம், நிர்வாகம், அறிவியல், வானியல் சாஸ்திரம், சட்டம், விவாதம், தெருகூத்து, நாடக கலை உள்ளது. அதை மேம்படுத்துவதற்கு, தென்மையான பாரத கலையை வளர்க்க கூடிய சிற்ப சாஸ்திரம். பெண்களுக்கு என, கர்க சாஸ்திரம் என, அழைக்கப்படும் சட்ட சாஸ்திரம் என்கிற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்டுள்ளன. இது மேன் மேலும் வளர்க்க வேண்டும். காமாட்சியம்மனின் பூமி தான், காஞ்சிபுரம். இங்கு, 365 நாளில், 120 நாட்களும் எல்லா விதமான உத்சவங்கள் நடக்கின்றன. இந்த உத்சவங்கள் பெரும்பாலும் கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி என, ராஜ வீதியை சுற்றி தான் நடக்கிறது. இந்த ராஜ வீதிகளின் மத்தியில் தான், காமாட்சியம்மன் இருக்கிறார். அந்த அளவிற்கு,‛ஸ்ரீ’(பெண்) முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.