உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் வைகாசி விசாக திருக்கல்யாண உற்ஸவம்

பழநியில் வைகாசி விசாக திருக்கல்யாண உற்ஸவம்

பழநி; பழநி, பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.

பழநி, கிழக்கு ரதவீதி, பெரியநாயகிகோயிலில் வைகாசி விசாக விழா மே 24 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சப்பரம், தந்த பல்லாக்கு, தங்கமயில் வாகனம், காமதேனு வாகனம், ஆட்டுக்கடா வாகனம், வெள்ளி யானை வாகனம், வெள்ளி மயில் வாகனம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் புறப்பாடு நடைபெறும்.

திருக்கல்யாணம்: இன்று (மே 29) மாலை கோவில் முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். சிறப்பு ஹோமம், அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. பூணூல் கல்யாணம், வஸ்திரம் அணிவித்தல் நடந்தது. மாங்கல்யதாரணம் இரவு நடைபெற்றது. மாலை மாற்றுதல் நடந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தேரோட்டம்: மே 30 தோளுக்கினியான் வாகனத்தில் காலை 10:30 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் தேரேற்றம் நடக்கும். மாலை 4:30 மணிக்கு வைகாசி விசாக தேரோட்டம் ரதவீதிகளில் நடைபெறும். இரவு பெரிய தந்த பல்லாக்கில் தேர்க்கால் பார்த்தல் நடைபெறும். ஜூன் 2, அன்று திருஊடல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவடையும். மேலும் விழா நாட்களில் வைகாசி விசாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !