உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

  திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.

இதையொட்டி, காலை 9:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு உலக மக்கள் நலன்பெற வேண்டி, திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணியளவில் முன்மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது.இரவு 7:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !