புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3 hours ago
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி, காலை 9:30 மணியளவில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு உலக மக்கள் நலன்பெற வேண்டி, திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணியளவில் முன்மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது.இரவு 7:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.