உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த விழா தீர்த்தவாரி

சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த விழா தீர்த்தவாரி

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த விழா தீர்த்தவாரி நடந்தது.

பரமக்குடியில் சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு வடக்கு திசை நோக்கி மூலவர் பரமசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அருள் பாலிக்கிறார். கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா ஐந்து நாட்கள் நடந்தது. தினமும் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் சேவை சாதித்தார். மேலும் பவுர்ணமி நாளில் குதிரை வாகனத்தில் ராஜாங்க திருக்கோலத்தில் அலங்காரமாகி வீதி உலா வந்தார். விழாவின் நிறைவு நாளில் வசந்த மண்டபத்தில் தீர்த்த மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மகா தீப ஆராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !