சிங்கம்புணரி தேரோட்டத்தில் பறந்த சூரைத் தேங்காய்
சிங்கம்புணரி,; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தேரோட்டத்தில் பக்தர்கள் போட்டி போட்டு சூரைத் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இக்கோயில் வைகாசி தேரோட்டத்தின் போது தேர் நிலைக்கு வந்தவுடன் பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். எங்கும் இல்லாத வகையில் இங்கு லட்சக்கணக்கான தேங்காய்களை ஒரே நேரத்தில் வீசியெறிந்து உடைக்கப்படும். இன்று மாலை தேர் நிலைக்கு வந்ததும் இருபுறமும் தயாராக இருந்த பக்தர்கள் போட்டிபோட்டு தேங்காய்களை தேரடி படிகள வீசி எறிந்து உடைத்தனர். உடைந்து விழும் தேங்காய்களை சேகரிப்பதற்காக பலர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சேகரித்தனர். தேர் நிலைக்கு வந்த 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை தொடர்ந்து தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான தேங்காய்கள் உடைக்கப்பட்டது. சிங்கம்புணரி பகுதியில் தென்னந்தோப்புகள் அதிகம் உள்ள நிலையில் தேங்காய் விளைச்சலும் அதிகம். அதனால் இப்பகுதி மக்கள் தேங்காய்களை நேர்த்திக்கடனாக உடைப்பதை தொன்று தொட்டு கடைபிடித்து வருகின்றனர்.