உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணக்காட்டூர் முத்தாலம்மன் கோயில் விழாவில் கழுமரம் ஏறி நேர்த்திக்கடன்

மணக்காட்டூர் முத்தாலம்மன் கோயில் விழாவில் கழுமரம் ஏறி நேர்த்திக்கடன்

நத்தம்: மணக்காட்டூர் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நடந்த கழு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


இக்கோயில் விழாவையொட்டி மே 20ல் சுவாமி சிலை செய்ய பிடிமண் எடுத்து கொடுக்க அன்று இரவு காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. நேற்று இரவு கிராம தேவதைகளுக்கு கனி வைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து முத்தாலம்மன் கோயிலுக்கு வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி, ஆடுகள் வெட்டி பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். பின்னர் படுகளம் போடுதல், குட்டி கழுமரம் ஏறுதல், பந்தய கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கழுமரத்தில் போட்டி போட்டு ஏறி இலக்கை தொட்டனர். பின்னர் பொங்கல் வைக்க நேற்று மாலை தீவட்டி பரிவாரங்கள், வாண வேடிக்கைகளோடு அம்மன் பூஞ்சோலை செல்லுதல் நடைபெற்றது. சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !