சிந்து தர்ஷன் யாத்ரா சமிதியினர் சிந்துநதி கும்பமேளா யாத்திரை
திருப்பூர்: சிந்து தர்ஷன் யாத்ரா சமிதி சார்பில், சிந்துநதி புனித யாத்திரை குழுவினர், திருப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றனர்.
காஷ்மீரில் உள்ள சிந்து நிதியில், ஆண்டுதோறும் ஜூன் மாதம், சிந்துநதி கும்பமேளா நடக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் சென்று, புனித நீராடி வருவது வழக்கம். அதன்படி, சிந்து தர்ஷன் யாத்ரா சமிதி சார்பில், சிந்து நிதி புனித யாத்திரை குழு, திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து, சிந்து தர்ஷன் யாத்ரா சமிதி நிர்வாகிகள் கூறியதாவது: சிந்து நதியில், 22 துவங்கி, 27ம் தேதி வரை, கும்பமேளா நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்தாண்டு, 30வது ஆண்டு யாத்திரையாக இன்று (நேற்று) புறப்பட்டுள்ளோம். டில்லி வரை ரயிலில் சென்று பின், பஸ்சில் செல்வோம். வரும் 18ம் தேதி குரு ேஷத்திரத்தை அடைவோம். 22ம் தேதி சிந்துநிதி செல்வோம்; புனித நீராடி வழிபட்ட பின், வரும், 30ம் தேதி வரை, மணாலி, அடல் சுரங்கப்பாதை, கீலாங்கில், பரலாச்சா, சிந்துகாடு, பாங்காங் ஏரி, கர்துங்லா, கார்கில், ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளை பார்த்துவிட்டு ஊர் திரும்புவோம். நாடு முழுவதும் இருந்து வரும், 2,500க்கும் மேற்பட்டவர்கள், ஹரியானா மாநில எல்லையை வந்தடைவர். அங்கிருந்து, பஸ்சில் சென்று கும்பமேளாவில் பங்கேற்று திரும்புவோம்,’ இவ்வாறு அவர்கள் கூறினர்.