உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்ஸவ கொடியேற்றம்

ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்ஸவ கொடியேற்றம்

 ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி உற்ஸவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று காலை 7:00 மணிக்கு கொடிபட்டம் மாட வீதிகள் சுற்றி வந்து வடபத்ரசாயி கோயில் பெரியாழ்வார் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது. கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து பிரகாஷ் பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல் நடந்தது‌. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட் டர்கள் செய்திருந்தனர்.ஜூன் 26 வரை விழா நாட்களில் தினமும் காலை 10:00 மணிக்கு பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல், இரவு 6:00 மணிக்கு மேல் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடக்கிறது. ஜூன் 24 காலை 7:30 மணிக்கு செப்பு தேரோட்டமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !