தமிழக கோவில்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனம்
ADDED :1 hours ago
சென்னை: திருவண்ணாமலை கோவிலில், மாற்றுத்திறனாளி பெண், வரிசையில் நிற்க முடியாத நிலையில், சிறப்பு வழியில் அனுமதிக்க, கோவில் ஊழியர்கள் மறுத்த வீடியோவை பக்தர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறிய தாவது: தமிழக கோவில்கள் அனைத்திலும், கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை, சிறப்பு வழியில் விரைவாக தரிசனம் செய்ய, அனுமதிக்க வேண்டும் என, அனைத்து கோவில் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோவிலில், மாற்றுத்திறனாளியை அனுமதிக்காதவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.