உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  திருமூலஸ்தானத்தில் பழமையான கல் அம்மன் சிலை கண்டெடுப்பு

 திருமூலஸ்தானத்தில் பழமையான கல் அம்மன் சிலை கண்டெடுப்பு

 காட்டுமன்னார்கோவில்: திருமூலஸ்தானத்தில் வாய்க்கால் துார்வாரும்போது, மண்ணில் புதைந்த நிலையில் இருந்த சிதலமடைந்த அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

காட்டுமன்னார்கோவில் அடுத்த திருமூலஸ்தானத்தில் நேற்று முன்தினம் கஸ்பா பாசன வாய்க்கால் ஜே.சி.பி., மூலம் துார்வாரும் பணி நடந்தது. அய்யனார்கோவில் அருகே துார்வாரும்போது, பழமையான கருங்கல் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை சிதலமைந்த நிலையில் இருந்தது. தகவலறிந்த வி.ஏ.ஓ., நவநிதா சென்று, அம்மன் சிலையை மீட்டு, காட்டுமன்னார்கோவில் தாசில்தார் பிரகாஷிடம் ஒப்படைத்தார். அச்சிலை இரண்டரை அடி உயரம், இரண்டு அடி அகலம் கொண்டதாக உள்ளது. சிலை சிற்ப வடிவமைப்பு பழங்காலத்தை சேர்ந்த்தாக உள்ளது. அதனால் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  பழமையான சிலையாக இருப்பதால், கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, பின்னர் தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்யப்படும் என தாசில்தார் பிரகாஷ் தெரிவித்தார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !