மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் வேல்மாறல் நிகழ்வு
ADDED :17 hours ago
பல்லடம்: பல்லடம் அருகே, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், வேல்மாறல் நிகழ்வு நேற்று விமரிசையாக நடந்தது.
பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், 48வது வார வேல்மாறல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக, நேற்று காலை, 9:00 மணிக்கு சிறப்பு வேள்வி வழிபாடுகளுடன் வேல்மாறல் நிகழ்வு துவங்கியது. காலை, 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. இதனையடுத்து, திருக்கலசத்துக்கு புனித நீர் விடுதல் நிகழ்வும், தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. காலை, 11.45 மணிக்கு வேல் மாறல் பாராயணமும், இதனையடுத்து, சிறப்பு அலங்காரத்தில், முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.